பிறந்த மாத பொது பலன்கள் என்பது நம் வாழ்க்கை பாதையை புரிந்து கொள்ள உதவும் ஒரு முக்கிய ஜோதிட வழிகாட்டி.
நாம் பிறக்கும் மாதத்தை அடிப்படையாகக் கொண்டு, நமது குணாதிசயம், மனநிலை, உறவுகள், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் ஆன்மிக முன்னேற்றம் போன்றவை தீர்மானிக்கப்படுகின்றன.
இந்த பதிவில்:
✔️ சித்திரை முதல் பங்குனி வரை பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள்
✔️ கிரக ஆதிக்கம் & அதன் விளைவுகள்
✔️ குடும்பம், திருமணம், தொழில், அரசு யோகம் பற்றிய குறிப்புகள்
✔️ நல்லதும் சவாலானதும் சமநிலையாக விளக்கப்பட்டுள்ளது
இவை பொது பலன்கள் மட்டுமே. தனிப்பட்ட ஜாதகப் பலன்களுக்கு ஜாதக ஆய்வு அவசியம்.
ஆன்மிகம் & ஜோதிடம் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு ஒரு அறிவு வழிகாட்டி ஆக இருக்கும்.
பிறந்த மாத பொது பலன்கள் : நீங்கள் எந்த மாதம்
1.சித்திரையில் பிறந்தவர்கள் 
விசித்திரமானவர்கள்,வீரியமானவர்கள்..சூரியன் உச்சம் ,தலைமை பண்பு எதிலும் முதலிடம்..சித்திரையில் பிறக்கும் குழந்தையால் தந்தைக்கு ஆபத்து..
செவ்வாய் ஆட்சி -பிடிவாதம், கோபம்.. சகோதரனுக்கு தொல்லை..சனி நீசம் கெட்ட பழக்க வழக்கம் நோய் பாதிப்பு நிச்சயம் உண்டு..
2.வைகாசியில் பிறந்தவர்கள் 
கற்பனையானவர்கள்,கலகலப்பானவர்கள்..சந்திரன் உச்சம் நினைத்து நினைத்து பேசுதல்,திருப்தி வராது,முடிவெடுக்க தயக்கம்..சுக்கிரன் ஆட்சி,உடல் கவர்ச்சி உணர்ச்சிவசப்படுதல்..,ராகு- கேது நீசம் தாத்தா பாட்டிக்கு சிறப்பில்லை…
3. ஆனியில் பிறந்தவர்கள் 
சுயநலம்,புத்திசாலி,தைரியம்,வசிய சக்தி,புதன் ஆட்சி,சகல அறிவு புறம் பேசுதல் நினைத்ததை யோசித்து செயல்படுத்தி வெற்றிபெறுபவர்…
4. ஆடியில் பிறந்தவர்கள்
ஆதிபராசக்தி..அப்பாஅவதி,ஆரோக்கியம்,அன்புள்ளம்..சந்திரன் ஆட்சி தாய் பாசம் ,தாய் மோசம்,ஆட்டி வைக்கும் அன்பால் ஏமாற்றம் செவ்வாய் நீசம்,சகோதர துரோகம் வீடு இடம் வில்லங்கம்,கற்பூர புத்தி, கடவுள் அருள் கைகொடுக்கும்..
5. ஆவணியில் பிறந்தவர்கள்
அற்புத வாழ்க்கை,தந்தை யோகம்,சூரியன் ஆட்சி,அரசாங்க யோகம்
அரசு உதவி,தந்தை- தாய் மாற்றம்,ஏக்கம் துக்கம்,தூக்கம் லாபம்,நேருக்கு நேர்
துணிவே ஜெயம் தரும்…
6. புரட்டாசியில் பிறந்தவர்கள் 
புதன் ஆட்சி உச்சம் ,வாடகை பத்திரம்,வில்லங்கப் பத்திரம்..,சுக்கிரன் நீசம் ஒருவனுக்கு ஒருத்தி அதிலும் நேர்த்தி பொறுமையே கீர்த்தி..
7. ஐப்பசியில் பிறந்தவர்கள் 
சந்தேகம் சங்கல்பம்,ஏமாற்றம் விரக்தி,சூரியன் நீசம்,தந்தை பாதிப்பு தாய் ஏமாற்றம்,பெற்றோர் பகை உறவினர், உற்றார் பகை,அரசாங்க கொடுமை
அரசு லாபம்,சனி உச்சம்,உடல் கெடும் ஆயுள் விருத்தி,அரசு உதவி அன்பு,சுக்கிரன் ஆட்சி,திருமணம் தாமதம்,திருப்தியான வாழ்வு..
8. கார்த்திகையில் பிறந்தவர்கள் 
பிடிவாதம் எதிர்வாதம்,சகல அறிவு பீடை, பிரச்சினை,நிலப் பிரச்சினை
நிம்மதியற்ற வாழ்வு,அந்தரங்கம் மர்மம்,ஆயுள் கெடும்,சந்திரன் நீசம்
தாய் ஆதரவு தரித்திரம்,நீர் ஆபத்து
ராகு- கேது உச்சம், தாத்தா பாட்டி யோகம்
செல்வம் சொத்து சேர்க்கை தானாய் தேடிவரும்…
9. மார்கழியில் பிறந்தவர்கள் 
பெருமாள்.ஊருக்கு உபதேசம்கபடதாரி பொறுமை நிதானம்,பொறுப்பு வளர்ப்பு குரு ஆட்சி,நல்லவனுக்கு நல்லவன்,ஆன்மிகம் உத்வேகம் வள்ளல் வாய்ப்பேச்சு
தெய்வம் நின்று பேசும் கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும்.
10. தை மாதம் பிறந்தவர்கள் 
கொண்டாட்டம் கும்மாளம்,வெட்டிப் பேச்சு, விதண்டாவாதம்,சனி ஆட்சி எண்ணம் கொடூரம்,சரித்திர புகழ்,சரிவு சகஜம்,நீடித்த ஆயுள்,நிம்மதியற்ற வாழ்க்கை,செவ்வாய் உச்சம்,நில புலன் சேர்க்கை,பூர்வீக எதிரி,உடன்பிறந்தோர்க்கு துரோகி,குரு நீசம் புத்திர தோஷம்,புத்திர துரோகம் அத்தனையும் கர்மா அடக்கி வாசி…
11. மாசியில் பிறந்தவர்கள் 
மந்தம் மகிழ்ச்சி,பந்தம் புகழ்ச்சி,பொதுநலத்தால் சுயநலம் கெடும்.. சனி ஆட்சி அரசாங்க யோகம்,அத்தனையும் லாபம். புகழ் கீர்த்தி தேடிவரும்.
புரிந்துகொண்டால் கோடீஸ்வரன்..வள்ளல் கஞ்சன் அசுரன் அவதாரம் ,குலதெய்வம் கூடவே வந்து காக்கும்…
12. பங்குனியில் பிறந்தவர்கள் 
மனக் குழப்பம் கண்டறிய தெரியாது. சுக்கிரன் உச்சம் பார்த்ததும் பிடிக்கும்.
வசீகரக் குரல் வளம் வம்பு வந்தால் விடாது.புதன் நீசம்.புத்தி மங்கும்.
பிடித்தவரை விலக்கும், பத்திசாலி வலிய வருவ. குரு ஆட்சி.
